மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை திரிணமுல் காங்கிரஸ் குண்டர்களால் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,
“மோடியின் வளர்ச்சி கொள்கைக்கும், மம்தாவின் அழிவு கொள்கைக்கும் இடையிலான மோதலே வரும் சட்டசபை தேர்தலாகும்.
திரிணமுல் குண்டர்களால், 130 பா.ஜ.க தொண்டர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அனைத்து கொலைகாரர்களும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.
மாநிலத்தில் இருந்து திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்ற வேண்டும்.
5 ஆண்டுகளில் ஊடுருவல் காரர்களிடம் இருந்து மேற்கு வங்கத்தை விடுவிப்போம்.” என்றும் கூறியுள்ளார்.