கியூபெக் மாகாணம் மேலும் பல மாநகரசபைகளை முடக்கப் பட்டியலில் சேர்த்துள்ளது.
மாகாணத்தில் திரிபடைந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், நேற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவசியமற்ற வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதுடன், இரவு நேர ஊரடங்கு 9.30 மணியில் இருந்து, 8 மணிக்கு முன்நகர்த்தப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் உள்ளக கற்றல் செயற்பாடுகளும் நிறுத்தப்படவுள்ளன.
அதேவேளை, திரையரங்குகள், அருங்காட்சியங்களும், இன்று இரவு 8 மணி தொடக்க்கம், குறைந்தபட்சம் 12ஆம் நாள் வரை மூடப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் Quebec City, Levis , Gatineau ஆகிய நகரங்களில் கடந்தவாரத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.