ரொறன்ரோ பிரதேசத்தில் உள்ள மேல்நிலைப் பாடசாலைகளில் இளம் மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் 12 பாலியல் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக, விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேல்நிலைப் பாடசாலை வயது மாணவர்கள் மற்றும் மாணவிகள் பாலியல் தாக்குதல்கள் அல்லது உடல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியிருந்தன.
இதுவரை, 12 வெவ்வேறு அறிக்கைகள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர், தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பாலியல் தாக்குதல்களுக்கு ஆளான எவரும் தம்மிடம் முறைப்பாடு அளிக்குமாறும் காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.