முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மைக்கேல் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கரையைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

743

மைக்கேல் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கரையைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மணிக்கு 130 மைல்கள் வேகத்தில் இந்த புயல் கரையை கடந்துள்ள நிலையில், அந்த பகுதிகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த சூறாவளி காரணமாக புளோரிடாவில் 3,70,000 பேருக்கும் அதிகமான மக்கள் அவர்களை இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

புளோரிடாவில் ஏற்கனவே அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அலபாமா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமெரிக்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட புயல் மழை மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 13 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *