மொங்கோலியாவில் கடுமையான புழுதிப் புயல் தாக்கியதில், ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 80 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
புழுதிப்புயலில் சிக்கி 548 பேர் காணாமல் போனதாகவும், அவர்களில் 467 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
புழுதிப் புயலை அடுத்து காணாமல் போயுள்ள 81 பேரை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
மொங்கோலியாவில் தோன்றியுள்ள புழுதிப் புயல் சீனாவின் தலைநகரைத் தாக்கும் என்பதால், பீஜிங்கில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பீஜிங் நகரத்தில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும், இடைநிறுத்துமாறும் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்