முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மொசோ பள்ளத் தாக்கில் பிரமாண்ட அணை கட்ட சீனா முடிவு

177

திபெத்தின் மொசோ மாவட்டத்தில் உள்ள பள்ளத் தாக்கில் பிரமாண்ட அணை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.

உலகிலேயே மிகவும் நீளமான ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணை கட்டப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 900 அடி உயரத்தில் இந்த அணையை கட்ட  திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் சேமிக்கப்படுடும் நீரைக் கொண்டு 30 ஆயிரம் கோடி கிலோவாட் மின்சாரம் தயாரிக்க சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது.

சீனாவின் 14-வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அணை கட்டுமான பணிக்கு சீனா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் அணையின் கட்டுமானப் பணி தொடங்கப்படவுள்ளது,

இந்த அணை கட்டப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மலைவாழ் பழங்குடியினர் விரட்டப்படும் சூழ்நிலை ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளதுடன்,  சீனா தொழிலாளர்கள் திபெத்தில் நிரந்தரமாக குடியேறும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *