இந்த வாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் மொடேர்னா தடுப்பூசிகள் ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை தாமதமாகும் என்று ஒன்ராறியோ அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மார்ச் 22ஆம் நாள், 3இலட்சத்து 23, ஆயிரம் மொடேர்னா தடுப்பூசிகள் கிடைத்திருந்த நிலையில் மேலும் 97 ஆயிரம் மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மார்ச் 29ஆம் நாள் கிடைத்திருக்க வேண்டிய 2இலட்சத்து 25ஆயிரத்து 400 தடுப்பு மருந்துகளிலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த தொகுதி மருந்துகள் ஏப்ரல் 7ஆம் நாள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒன்ராறியோ முதல்வரின் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ள்ளன.
எனினும், இன்னமும் இந்த விநியோகம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.