மொன்றியலை தாக்கிய ஒரு கடுமையான திடீர் புயலினால் ஆயிரக்கணக்கான கியுபெக் மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
ஒரு சில நிமிடங்களே நீடித்த இப்புயல் இருண்ட கரு மேகங்களையும் பலத்த மழை மற்றும் கிட்டத்தட்ட மணித்தியாலத்திற்கு 100கிலோ மீற்றர்கள் வேகத்தில் கடுமையான காற்றையும் கொண்டு வந்துள்ளது.
மரக்கிளைகளும் மரங்களும் பல பகுதிகளை சேதப்படுத்தியுள்ளன.வர்த்தக கடைகளின் அடையாளங்கள் காற்றில் பறக்க தொடங்கின.
சூறாவளி ஒன்றின் வருகை குறித்து கனடா சுற்றுச்சூழல் எதுவித உறுதிப்பாடும் தெரியப்படுத்தவில்லை என அறியப்படுகின்றது.
கிட்டத்தட்ட 45,000கியுபெக் ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் பிற்பகல் 4.30மணியளவில் மின்சாரத்தை இழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 63,000ற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
புயல் தற்சமயம் கிழக்கு நோக்கி நகர்கின்றது.