சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வக்குமாருக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்திலும் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், லண்டனில் நேற்று சாகும்வரையிலான, உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
அவரது போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில், இனப்படுகொலைக்கான நீதியை வலியுறுத்தியும், நல்லூரில் இன்றுகாலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள் இருவர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.