பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் நிமித்தம் யாழ்ப்பாணத்தில் அதியுச்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர்.
இதன் காரணமாக யாழ்.நகரில் ஆயுதங்களுடன் இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி, பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதுபோல் வீதிகள் மூடப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது