சர்வதேச நீதி கோரியும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று இன்று காலை 10 மணியளவில் முத்திரைச்சந்தியில் உள்ள கிட்டுப் பூங்காவில் இந்த பேரணி ஆரம்பமானது.
அங்கிருந்து நகர்ந்த பேரணி, உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும், நல்லூர் கந்தன் ஆலய பின்வீதியில், நிறைவடைந்துள்ளது.
பேரணியில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், சிவில் சமூகத்தினர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மத குருமார் மற்றும் அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
பேரணியில் பங்கேற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கறுப்பு ஆடையுடன், காணாமல் போன தமது உறவுகளின் படங்கள் மற்றும் பதாதைகளையும் ஏந்திச் சென்றிருந்தனர்.