முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

யாழ்ப்பாண மாநகர முதல்வருடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை – ஈபிடிபி

490

யாழ்ப்பாண மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள மணிவண்ணனுடன், எந்த இரகசிய உடன்பாடும் செய்து கொள்ளவில்லை என்று ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபைகளில் மணிவண்ணன் தரப்பு,  ஆட்சியமைக்க, ஈ.பி.டி.பி ஆதரவளித்தமை குறித்து டக்ளஸ் தேவானந்தா, விளக்கமளித்துள்ளார்.

“மாநகரசபை நிர்வாகம் கலையும் ஆபத்து இருந்ததாலேயே,  இரண்டு சபைகளிலும் மணிவண்ணன் தரப்பை ஆதரிக்க முடிவெடுத்தோம்.

பிரதி மேயர், உப தவிசாளராக ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று, அவர்களுடன்  இரகசிய உடன்பாடு எதுவும் செய்யப்படவில்லை.

உள்ளூராட்சி மன்றங்களில் உப தவிசாளர்கள் பதவி விலகினாலேயே புதியவர்களை நியமிக்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *