யோகாசனம் ஒரு விளையாட்டு போட்டியாக முறைப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சார்பில் இன்று செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், யோகாசனம் ஒரு விளையாட்டு போட்டியாக முறைப்படி அங்கீகரிக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா, தேசிய மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் யோகாசனம் ஒரு விளையாட்டு போட்டியாக அறிமுகம் செய்யப்படும் என்று, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.