யோர்க் பிராந்தியத்தில் உள்ள இரண்டு பிரதான தடுப்பூசி போடும் மையங்கள் மீண்டும் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா வொண்டர்லான்ட் (Canada’s Wonderland) மற்றும் ஜோர்ஜினா ஐஸ் பலஸ் (Georgina Ice Palace) ஆகிய இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்களே போதிய தடுப்பு மருந்து இல்லாமல் தற்காலிகமாக மூடப்படுகின்றன.
செவ்வாய்க்கிழமை தொடக்கம் மூடப்படும் இந்த மையங்கள், தடுப்பு மருந்து விநியோகம் இடம்பெறும் வரை மூடப்பட்டிருக்கும் என்று, யோர்க் பிராந்திய பேச்சாளர் மெலிசா பின்டோ (Melissa Pinto) தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தடுப்பூசி மையங்களை தொடர்ந்து திறந்து வைத்திருப்பதற்கும், மையங்களின் செயற்பாட்டு நேரம் குறைக்கப்படுவதை தடுப்பதற்கும், மேலதிக மருந்து கையிருப்பை உறுதி செய்யுமாறு சுகாதார அமைச்சர் கிறிஸ்ரின் எலியட்டுக்கு (Christine Elliott) யோர்க் பிராந்திய தலைமை நிர்வாக அதிகாரியினால் கடந்த வெள்ளிக்கிழ்ழமை கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.