ரஜினி மக்கள் மன்றத்திலுள்ளவர்கள் அவர்கள் விரும்பினால் மன்றத்திலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்துகொள்ளலாம் என்று ரஜினி சார்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் ‘வேறு கட்சிகளில் இணைந்தாலும், எப்போதும் ரஜினியின் ரசிகர்கள் என்பதை மன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் மறந்துவிட வேண்டாம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ரஜினி தரப்பைச் சேர்ந்த நால்வர் தி.மு.கவில் இணைந்து கொண்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஜினியின் ரசிகர்களில் ஒரு தரப்பினர் அவர் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.