கொரோனா பரவல் அதிகரிப்பால் ரஸ்யா, பிரான்ஸ், போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்சின் 15 நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பாரிஸ் நகரில், அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்களை ஒரு மாதத்துக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, போலந்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அடுத்த மூன்று வாரங்களுக்கு வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், சினிமா திரையரங்குகளை மூடவும், பணிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கட்டுப்பாடுகள் உக்ரைன் நாட்டு தலைநகர் கீவ்விலும், (Kiev) அமல்படுத்தப்பட்டுள்ளன. அங்கும் வர்த்தக நிலையங்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஸ்யாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், புதிதாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.