முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

578

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுட்சிறைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நளினி இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்ககோரி தமிழக ஆளுனருக்கு கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்கள் பரிசீலிக்கப்படாமல் அப்படியே உள்ளது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றில் நளினி மனு ஒன்றை  தாக்கல் செய்தார்.

அதில், ‘எங்கள் 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து ஆவணங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்அமைச்சர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு தனித்தனியாக மனு கொடுத்தோம். அந்த மனுவை விரைவாக பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *