அமெரிக்க டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்தும், வீழ்ச்சியடைந்து வருகிறது.
சிறிலங்கா மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி, 200 ரூபாவைத் தாண்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் நாள் அமெரிக்க டொலரின் பெறுமதி, 200.46 ருபாவாக சரிவைச் சந்தித்திருந்தது.
அதற்குப் பின்னர், சிறிலங்கா நாணய மதிப்பு மிகமோசமான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று பொருளியல் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.