ரொரண்டோ நகரப் பகுதியில், கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
Sherbourne Street பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் அல்லது தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் தொடரபான எந்த விபரங்களும் இன்னமும் வெளியிடப்படவில்லை.