ரொரண்டோ தெற்கு தடுப்பு நிலையத்தில், மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ளது.
Etobicoke சிறைச்சாலையில் 70 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் 36 பேர் உருமாறிய வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ரொரண்டோ பொது சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த டிசெம்பர் மாதம் இந்த சிறைச்சாலையில் 54 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது, இந்தச் சிறைச்சாலையில் உருமாற்றடைந்த கொரோனா தொற்ற பரவி வருவது கவலையளிப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.