ரொரன்ரோவில் Etobicoke பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு கிடைத்த மர்மமான கடிதங்கள் குறித்து ரொரன்ரோ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குடியிருப்பாளர்கள் பலருக்கு கிடைத்த கடிதங்களில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது என்றும், வெண்ணிற துகள்கள் காணப்பட்டதாகவும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பல குடியிருப்பாளர்கள் முறைப்பாடு செய்துள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
குறித்த கடிதங்களில் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு Bit coin ஐ வைப்பிலிடுமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், எவ்வளவு வைப்பிலிடப்பட வேண்டும் என்ற தகவலை வெளியிடவில்லை.