ரொறன்ரோவில், சுமார் இரண்டு இலட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், 80 வயதுக்கு மேற்பட்ட முதலாம் வகை முன்னுரிமை குழுக்களில் உள்ளவர்களுக்கு 15 இடங்களில் தடுப்பூசிகளைப் போடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ வாசிகளுக்கு துரிதமாக தடுப்பூசிகளை செலுத்துவதற்காக, ரொறன்ரோ பொது சுகாதாரப் பிரிவு, மருத்துவமனைகள், சமூக சுகாதார பராமரிப்பு மையங்கள் என்பன இணைந்து பணியாற்றி வருகின்றன.
இதற்கமைய நேற்று வரை, ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 155 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.