ரொறன்ரோ பிரதேசம் இறுக்கமான முடக்க நிலையை நோக்கி மீண்டும் சென்று கொண்டிருப்பதாக, ஒன்ராறியோ விஞ்ஞான ஆலோசனை சபையின் உறுப்பினரான மருத்துவர் நேதன் ஸ்டோல் (Nathan Stall) தமது தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்துக்குள் முடக்க நிலைக்குள் செல்லாவிட்டால், அது அதிர்ச்சியாக இருக்கும் என்று Mount Sinai மருத்துவமனையின் ஆராய்ச்சியாளரான மருத்துவர் நாதன் ஸ்டோல் கூறியுள்ளார்.
மக்களின் வாழ்க்கை, சுகாதாரப் பராமரிப்பு ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பிரச்சினைகள் வரப் போகின்றன என்றும், அவர் எதிர்வு கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், மீண்டும் ஒரு முடக்க நிலையை அறிவிப்பது ஒன்ராறியோ அரசின் தவிர்க்க முடியாத நிலையாக இருக்கும் என்றும் அவர் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார்.