பீஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பீஹாரில், 1990 -97ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ராஞ்சி சிறையில், அடைக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து, ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு, சிகிச்சையளிக்கும் மருத்துவர் உமேஷ் பிரசாத், கீச்சகத்தில் வெளியிட்ட பதிவில், லாலு பிரசாத்தின் சிறுநீரக செயல்பாடு, எந்த நேரத்திலும் மோசமடையலாம். அதை கணிப்பது கடினம்” என்று கூறியுள்ளார்.