ஜெனிவாவில் விரைவில் ஆரம்பிக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நடவடிக்கைகளை பற்றியெரியச் செய்வதற்கான நேரம் பார்த்தே, வடக்கு, கிழக்கில் பேரணி நடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பாக, இன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிட்ட போதே, ஜெனரல் சவேந்திர சில்வா, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம் நடத்துவதற்கான உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ள அவர், சொந்த நலன்களுக்காக வெளிநாட்டுகளுக்கான பணியாற்றும் தனிநபர்கள் தான், இந்தப் பேரணியை ஒழுங்கு செய்திருந்தனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.