முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வடக்கில் இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரியதில் தவிறில்லை என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்

777

வடக்கில் உள்ள இராணுவத்தினரின் நினைவுச் சின்னங்களை அகற்ற வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து தவறானது அல்ல என்று இலங்கையின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் இந்தக் கருத்தில் தவறில்லை என்றும், அவ்வாறான ஒரு கருத்தை வெளியிடுவதற்கு விக்னேஸ்வரனுக்கு உரிமை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கருத்தின் ஊடாக நாட்டை பிரிப்பதாக கூறப்படவில்லை எனவும், இல்ஙகையில் வெளிநாட்டில் உள்ள எதிரிகளுடன் போர் செய்யப்படவில்லை என்றும், இலங்கையில் உள்ள ஒரு சகோதர தரப்பினருடனேயே போர் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது எனவும், எனவே தற்போது போர் நினைவுச் சின்னங்களை அமைத்துக்கொண்டிருக்காமல், அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் இலஙகையின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இவ்வாறான கருத்து தமிழ் மக்களின் இரத்தத்தை கொதிப்படையச் செய்யும் நடவடிக்கையாகும் என்று சாடியுள்ளார்.

இதிலிருந்து விக்னேஸ்வரன் வெளியே வர வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை எந்தவொரு நினைவுச் சின்னத்தையும் அகற்ற அரசாங்கம் தயாரில்லை என்றும், முதலமைச்சருக்கு ஏற்ற வகையில் நாட்டின் சட்டத்தை மாற்ற முடியாது என்றும் அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *