முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வடக்கு கிழக்கின் இனவாதத்துக்கு எதிராக வீர துட்டகைமுனு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்

698

வீர துட்டகைமுனு இயக்கத்தை முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஆரம்பிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் 23 ஆம் நாள் அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக இந்த இயக்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, வடக்கிலும், கிழக்கிலும் இனவாதம் உருவாவதை அனுமதிக்க முடியாது எனவும், கடந்த மன்னர்களது ஆட்சியின் போது இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பேகர் ஆகிய சகலரும் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிங்களவர்களுக்கு இலங்கையில் இருந்த உரிமைகள் இல்லாமல் போவதை அனுமதிக்க முடியாது எனவும், அதனை மீளவும் பெற்றெடுப்பது இந்த அமைப்பின் நோக்கமாகும் எனவும் மேவின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மகிந்த ராஜபக்ஸவின் குழுவும், சனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கமும் இலங்கையில் சிங்களவர்கள் வீழ்ந்துள்ள பாதாளத்திலிருந்து மீட்பதற்கு தவறியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இவர்கள் வடக்கிற்குச் சென்று தமிழ் மக்களையும் கிழக்குக்குச் சென்று முஸ்லிம் மக்களையும் ஏமாற்றுகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *