முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று

327

வடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“மன்னார் முசலி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முசலியில் கடந்த வாரம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவருடன் தொடர்புடைய 5 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வெளிமாவட்டத்திலிருந்து வருகை தந்து முசலியில் தங்கியிருந்து மீன்வாடியில் தொழில் செய்யும் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியாலையில் சேர்க்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *