முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று

286

வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 304 பேரின் மாதிரிகளும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் 427 பேரின் மாதிரிகளும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இவர்களில் 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒருவரும் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட மானிப்பாயைச் சேர்ந்த தாய்க்கும் மகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் நவீன சந்தை வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் 21 வயது இளைஞன் ஒருவர் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *