முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வடக்கு மாகாணத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று

333

யாழ். போதனா மருத்துவமனையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட  கொரோனா பரிசோதனையில், வடக்கு மாகாணத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ். போதனா மருத்துவமனை  ஆய்வுகூடத்தில் 373 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேருக்கும்,  வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த  12 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 இது தவிர, கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில், 6 பேருக்கும் நேற்றைய பரிசோதனையின் போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *