நாடாளுமன்ற வரவு செலவு கூட்டத்தொடர் இந்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாள் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான அமித்ஷா மற்றும் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அதேநாளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில் அ.தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விரு கூட்டங்களும் காணொலி வாயிலாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது