முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்

246

வவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய சேலர் சின்னகுளம் கிராமத்தில் இவ்வாறு கடந்த இரண்டு நாட்களாக வீடுகளுக்கு செல்லும் நான்கு இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குடியிருப்பாளர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதாக கூறியே இராணுவத்தினர் வீட்டில் வசிப்பவர்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம், வயது தொலை பேசி இலக்கம் உள்ளிட்ட விபரங்களை சேகரிப்பதாகவும் கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய சூழலில் இராணுவத்தினரால் இவ்வாறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றமை தொடர்பில் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *