வவுனியாவில் 150 பேரிடம் நேற்று முன்தினம் பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் இருவருக்கும், காவல்துறை அதிகாரி ஒருவருக்குமே தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைச் சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.