வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 10.30 மணியளவில் குறித்த தாயும் மகளும் வீட்டில் இருந்த போது, குடும்பத் தலைவரே, வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு வவுனியா மருத்துவமனையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாள்வெட்டில் ஈடுபட்ட குடும்பத் தலைவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.