நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத கருத்துக்களை வெளியிடுவதற்கு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்தோடு, அமைச்சர் விமல் வீரவன்சவின் உறுதிப்படுத்தப்படாத கருத்துக்களை வெளியிட்ட மூன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தன் மீது தொடர்ந்தும் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் அமைச்சர் விமல் வீரவன்ச மீது விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில், ரிஷாட் பதியுதீன் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த முறைப்பாட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது