வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் குறித்து நாளை மாநிலங்களவையில் விவாதிக்கப்படும் என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
வரவு, செலவு திட்டம் நேற்று தாக்கல் செய்யப்பட்டநிலையில் மாநிலங்களவை இன்று காலை கூடியது.
இதன்போது வேளாண் சட்டங்கள் குறித்த விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. குறித்த கோரிக்கைகளுக்கு அமைய நாளை விவாதிக்கப்படும் என்று வெங்கையா நாயுடு அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில் மீண்டும் அவைக்குள் வந்து கோசங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அவை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.