டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று நடத்த உள்ள உழவு இயந்திர பேரணி விடயத்தில் தலையிட முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவல்துறை மூலமாக டெல்லி பேரணிக்கு எதிரான மனுவை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த இந்திய அரசு, விவசாயிகள் நடத்த உள்ள உழவு இயந்திர பேரணி குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்றும், அது தேசத்திற்கு தர்மசங்கடமான ஒரு சூழலை உருவாக்கும் என்றும் கூறியிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, டெல்லியில் யார் நுழைய முடியும், நுழைய முடியாது என்பதை இந்த நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்று இந்திய அரசின் தலைமை சட்டவாளர் கே.கே. வேணுகோபாலிடம், நீதிபதிகள் தெரிவித்தனர்.