முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை, மேலும் நீடிப்பதற்கு முதல்வர்கள் கோரிக்கை

224

வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை, மேலும்  நீடிப்பது குறித்து  விரைவில் அறிவிக்க வேண்டும் என்று ஒன்ராறியோ அரசாங்கத்திடம், பல்வேறு நகரங்களின் முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒன்ராறியோ அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள வீடுகளில்  தங்கியிருக்கும் உத்தரவு வரும் 20ஆம் நாளுடன் முடிவடையவுள்ளது.

எனினும், தொற்றுப்பரவல் இன்னமும் முழுமையான   கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில், முடக்க நிலையை மேலும்  நீடிக்க வேண்டும் என்று ஒன்ராறியோ அரசாங்கத்திடம்,  வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மே 20ஆம் நாளுக்குப் பின்னர், வீடுகளில்  தங்கியிருக்கும் உத்தரவை நீடிப்பது தொடர்பான மேலதிக  விபரங்களை கூடிய விரைவில் மாகாண அரசாங்கம் அறிவிக்க  வேண்டும் என்று ரொறன்ரோ முதல்வர் ஜோன் ரொறி மற்றும்  ஹமில்டன்  மாநகர முதல்வர் பிரெட்  ஈசென்பேகர் (Fred Eisenberger) ஆகியோர், கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் பல நகர நிர்வாகங்களும் இந்த வேண்டுகோளை விடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *