வெளிநாட்டு தொடர்புகளைக் கொண்ட தமிழ் மக்கள் சிலரே சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும், கொரோனா நிலைமைகள் குறித்து ஆராய திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவம், மனிதாபிமான ஒரு இராணுவம் என்றும், அதனை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆயினும், வெளிநாட்டில் இருப்பவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கு பணத்தை அனுப்புவதாகவும் அவர் சிறிலங்கா இராணுவத் தளபதி குற்றம்சாட்டியுள்ளார்.
அவ்வாறு பணத்தை பெறுபவர்கள், அல்லது வெளிநாட்டு தொடர்புகளைக் கொண்டுள்ளவர்களே, சிறிலங்கா இராணுவம் கொடுமையானது, அவர்கள் இங்கே தேவையில்லை என்று பிரசாரம் செய்கின்றனர் என்றும், ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.