ஜோ பைடன் பதவியேற்புக்கு முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு தனது மனைவியுடன் வெளியேறியுள்ளார்.
பைடனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கமாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், அறிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று வெள்ளை மாளிகையிலிருந்து தனது மனைவி மெலானியா டிரம்ப்புடன் வெளியேறினார்.
21 குண்டுகள் முழங்க அவர் வழியனுப்பி வைக்கப்பட்டார்.
புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவை புறக்கணித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகையை விட்டு புறப்படும் முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்த ட்ரம்ப், “புதிதாக பதவியேற்க உள்ள அரசு சிறப்பாக ஆட்சி புரிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன், தனது ஆட்சியில் சிறந்த நிர்வாகத்தை அளித்தேன் என்று, மிகப் பெரிய அளவிலான வரிகளை குறைத்ததால் மக்கள் வளமாக வாழ்ந்தனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கொரோனாவால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்ட போது 9 மாத காலத்திற்குள் தடுப்பூசி கண்டறியப்பட்டது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் பிற நாடுகளின் மீது போர் தொடுக்காத முதல் ஜனாதிபதி தானே என்றும், அவர் தெரிவித்துள்ளார்.