ஹஜ் யாத்திரை மேற்கொள்வோர் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் ஏற்றியிருக்க வேண்டும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி ஏற்றியவர்கள் மாத்திரமே இம்முறை ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள முடியுமென சவுதி அரேபிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மக்கா மற்றும் மதீனாவில் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதற்கான ஆளணியை நியமிக்க அரசாங்கம் தயாராக வேண்டுமென சவுதி சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த வசதிகள் நுழைவாயில்களில் ஏற்படுத்தப்படும் எனவும், இதற்கு மேலதிகமாக தடுப்பூசிக்குழு அமைக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.