முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஹமில்டன் நகரில் இரண்டு போராட்டங்கள்; 22 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள்

984

ஹமில்டன் நகரில் நேற்று இடம்பெற்ற இரண்டு போராட்டங்கள் தொடர்பாக 22 பேருக்கு எதிராக காவல்துறையினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஹமில்டன் நகர மண்டபத்தில் நேற்று கூடிய 20 பேர், முடக்க நிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், காசாவில் இடம்பெறும் தாக்குதல்களை கண்டித்து பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணி ஒன்றும் இடம்பெற்றது.

வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை மீறியும், நடைமுறையில் உள்ள சுகாதார விதிமுறைகளுக்கு முரணாகவும், இந்தப் பேரணிகள் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முடக்க நிலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற 8 பேர் மீதும், பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற 12 பேர் மீதும் காவல்துறையினரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டத்தை ஒழுங்கு செய்த இரண்டு அமைப்புகள் மீதும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *