ஒன்ராரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 258 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இக்காலப்பகுதியில் 24 மரணங்களும் சம்பவித்துள்ளன.
கடந்த நான்கு மாதங்களின் முதற்தடவையாக நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் எவ்விதமான மரணங்களும் சம்பவிக்காத நாளாக இக்காலப்பகுதி அமைந்துள்ளதாக பொதுசுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஒன்ராரியோவில் இதுவரையில் 34 சுகாதாரப் பிரிவுகள் மீளவும் திறக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் வழமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அனைத்துச் செயற்பாடுகளும் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.