முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறில்ஙகா படையினர் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்

554

11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறில்ஙகா கடற்படை புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் இருவரும் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சந்தேகநபர்களை தலா ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பிணையிலும் மற்றும் 5 இலட்சம் ரூபாய் சரீர பிணைகளிலும் விடுவிக்க நீதிபதி இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2008-2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பின் பல பிரதேசங்களில் 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *