முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

12 வானூர்திகள் புதுப்பிப்பதற்காக வெளிநாடுகளுக்கு

293

சிறிலங்கா வான்படை 12 வானூர்திகளைப் புதுப்பிப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வான்படை வானூர்திகளை புதுப்பிக்கும் திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை 49 மில்லியன் டொலரை வழங்க அனுமதி அளித்துள்ளது,

இதையடுத்து, வான்படையின் 5 கிபிர் போர் வானூர்திகளை இஸ்ரேலுக்கு அனுப்பி பழுதுபார்த்து, புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் இந்த மாதத்துக்குள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், சி-130 வானூர்திகள் இரண்டை, இஸ்ரேலுக்கும், ஒரு வானூர்தியை பாகிஸ்தானுக்கும் அனுப்பி புதுப்பிக்கவும் சிறிலங்கா வான்படை திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே அன்ரனோவ்-32  ரக வானூர்திகள் மூன்று, உக்ரேனுக்கு புதுப்பிப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும், மூன்று எம்.ஐ. 17 உலங்கு வானூர்திகள் லிதுவேனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பல எம்.ஐ-35 தாக்குதல் உலங்குவானூர்திகளையும், புதுப்பிப்பதற்கான உக்ரேனுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *