முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

15 பேர் கொண்ட குழுவை நியமித்தது கூட்டமைப்பு

601

வடக்கு கிழக்கில் இந்தியாவின் உதவியுடனான பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 15 பேர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு துறைசார் நிபுணர்கள் ஆகியோரைக் கொண்டதாக அக்குழு செயற்படவுள்ளது.

கடந்த வியாழக்கிழமை சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபல் பாக்லேக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான செயற்றிட்ட வரைவுகளை கையளிக்கும் பட்சத்தில் உரிய நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் ஆராயப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *