முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

170 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது

278

காங்கேசன்துறைக் கடற்பரப்பில் சுமார் 170 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையினர் சந்தேகத்துக்கு இடமான படகு ஒன்றை, வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போதே, படகில் இருந்து கஞ்சா பொதிகளைக் கைப்பற்றியதுடன், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களும், கஞ்சாவுடன் கைப்பற்றப்பட்ட படகும், காங்கேசன்துறை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *