18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் பிரேரணையை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஒழுக்கமான, சட்டத்துக்கு கட்டுப்பட்ட நாட்டை உருவாக்கும் நோக்கிலேயே இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே உத்தியைப் பயன்படுத்திய பல நாடுகள், இந்த திட்டத்தின் பலன்களைப் பெற்றுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
“18 வயதுக்கு மேற்பட்டஇளைஞர், யுவதிகளுக்கு, இராணுவப் பயிற்சியை வழங்க வேண்டும்.
இராணுவப் பயிற்சிக்கு அஞ்சத் தேவையில்லை. ஒரு இராணுவப் பயிற்சியின் மூலமே ஒருவர் வலுவாக நிற்கவும், ஆளுமை மற்றும் தலைமைத்துவ திறன்களை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.” என்றும் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.