சுகாதார அமைச்சின் தேசிய தடுப்பூசி வரிசைப்படுத்தல் திட்டத்தின்படி, சிறிலங்காவில் 2.65 மில்லியன் முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவேக்ஸ் திட்டம், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் பல நன்கொடையாளர்கள் இடையேயான உடன்பாடு என்பன தடுப்பூசியை பெற்றுக்கொள்ள உதவுகிறது என யுனிசெப் இன்று தெரிவித்துள்ளது.
சிறிலங்கா உட்பட உலகளவில் கொரோனா தடுப்பூசிகளின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக, பல்வேறு இருதரப்பு, பலதரப்பு மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட கூட்டாளர் அரசாங்கங்கள் குறிப்பிடத்தக்க ஆதரவையும் நிதியையும் வழங்குகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.