கனடாவில் 20 தொடக்கம் 39 வயதுக்கு இடைப்பட்டவர்களின் மத்தியில் கொரோனா தொற்று பரவல் அதிகளவில் இருப்பதாக, கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி மருத்துவர் தெரெசா டாம் (Theresa Tam) தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதுதொர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
இளவயதினர் மத்தியில் தொற்று பரவல் அதிகளவில் இருப்பதாகவும், அவர்கள் அதிகளவில் நடமாடுவது மற்றும் சமூக தொடர்புகளை கொண்டிருப்பதால், அதிக ஆபத்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய அனைத்து வயதினர் மத்தியிலும் தொற்று காணப்பட்டாலும், இளவயதினரைப் பாதிக்கும் வீதம் அதிகமாக உள்ளது என்றும் மருத்துவர் தெரெசா டாம் (Theresa Tam) தெரிவித்துள்ளார்.